“ தாய்மொழியைக் கற்போம்! தாய்மொழியால் தரம் உயர்வோம்!”
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றியது நம் தாய் மொழியாம் தமிழ் மொழி. தமிழ் மொழியானது உலக மக்களே ஆர்வமுடன் கற்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வகையிலேயே நம் பல்கலைகழகப் பாடத்திட்டமும் மாணவர்களுக்கு மொழிப்பற்றை உண்டாக்கும் வகையில் அமைத்துள்ளது. மாணவர்கள் இதனைக் கற்று மேன்மையடையும் வகையில் நம் கல்லூரியில் இளங்கலைத் தமிழ்ப் பாடப்பிரிவு தொடங்கப் பெற்று சிறந்த முறையில் இயங்கி வருகின்றது.
1. அருஞ்சொற்பொருள்கள்
2. பல்கலைக்கழகத் தேர்வில் தொடர்ந்து கேட்கப்படும் வினாக்கள்
3. பல்கலைக்கழகத் தேர்வின் மாதிரி வினாத்தாள்கள்
4. மாணவர் கையேடு
5. வினா வங்கி
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது தஞ்சை மாவட்டத்தில் நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வியை 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. கல்லூரி தொடங்கப் பெற்ற நாள் முதல் 12 ஆண்டுகளாகத் தமிழ்த் துறை சீரும் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. 2019 – 2020 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்த்துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்கள் உள்ளடக்கிய இளங்கலைத்தமிழ் பட்டப் படிப்பு தொடங்கப் பெற்றது. 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் 22 மாணவர்களும், 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் 07 மாணவர்களும் தமிழ்ப் பட்டப்படிப்பில் பயின்று வருகிறனர். தமிழ் இலக்கண , இலக்கியத்தின் பெருமைகளை மாணவர்கள் உணரும் வகையிலும் , பாரதிதாசன் பல்கலைக் கழகப் பாடத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கும் வகையிலும் பாடங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றது. நம் துறையின் சார்பாக பன்னாட்டுக் கருத்தரங்கம், தேசியப் பயிலரங்கமும் மாணவர்கள் பயனுறும் வகையில் நடத்தப் பெறுகின்றது. மேலும் தமிழ்த் துறையில் இலக்கியப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவருக்கு “சுடர் ஒளி” பட்டமும் ஆண்டுதோறும் வழங்கப்பெறுகிறது.
Under Graduation | ||
---|---|---|
# | Name of the Programme | Student Intake |
1 | Bachular of Tamil | 40 |
# | BATCH | TOTAL NO OF STUDENTS | BOYS | GIRLS |
---|---|---|---|---|
1 | 2019-2020 | 22 | 13 | 9 |
2 | 2020-2021 | 7 | 3 | 4 |
3 | 2021-2022 |
விரைவில் வெளியிடப்படும்
விரைவில் வெளியிடப்படும்